Wednesday 21 March 2012

தெளிவு குருவின் திருவடி!


"இப்பொழுது தானே சொன்னேன்" என்று புன்னகையுடன் கூறினார்.

"அருணாச்சல" என்ற பெயரில் "அருண" "அசல" என்று இரு பதங்கள் உள்ளன.  "அருண" என்றால் சிவப்பு.  "அசல" என்றால் மலை.  அதாவது "செம்மலை".  இங்குள்ள பெரிய கோவிலில் எழுந்தருளியுள்ள தெய்வத்தின் பெயரும் இதுவேயாதளால் இச்சொல்லை "புனித செம்மலை" என்று மொழி பெயர்ப்பது சரியாகும்" என்றார்.

"இந்த மலைக்கும் தீபத்திற்கும் என்ன சம்பந்தம்?"  என்றேன்.

"அதுவா? வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் பிரம்மோத்சவத்தை குருக்கள் கொண்டாடுவார்.  கோயிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டும் அதே நேரத்தில் மலை உச்சியில் பெரிய தீபம் ஏற்றப்படும்.  அது எரிவது நெய், கர்பூரன்களால் நிறைக்கப்பட்ட ஒரு பெரிய கொப்பரையில்.  பல நாட்கள் தொடர்ந்து எரியும் இந்தத் தீபம், பல மைல்கள் தொலைவிலிருந்தும் கண்ணுக்குத் தெரியும்.  தீபம் தெரிந்த உடனேயே அதைத் தரிசிப்பவர்கள் அதன் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்கள்.  ஒரு பெறும் தெய்வத்தின் நிழலில் நிற்கும் இந்த மலை பவித்திரமானது என்ற மக்களின் நம்பிக்கையின் புறச்சின்னமே இந்த வணக்கம்".

எங்கள் முன் அருணாசலம் வானோங்கி உயர்ந்து நின்றது.  சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறப் பாறைகள் நிறைந்ததும் முது போன்று தெள்ளிய வானில் சில ஆயிரம் அடிகளுக்கு மேல் தனது தட்டையான தலையைச் செலுத்திக் கொண்டும் தன்னந்தனியே நிமிர்ந்து நிற்கும் இந்த ஏகாந்தமான பர்வதத்திக்குச் சிற்பி செதுக்காத ஒரு தனி அழகும், காம்பிர்யாகும் இருப்பதை மறுக்க முடியாது.

துறவியின் சொற்கள் எண்ணை உணர்ச்சி வயப்படுத்தினவோ அல்லது எனக்குத் தெரியாத வேறு காரணத்தினாலோ என்னவோ அந்த பவித்திரமான மலையைத் தன்னை மறந்து நான் நோக்கியபொழுது, அருணாச்சலத்தின் சரிவான ஏற்றத்தை வியப்புடன் கண்ணால் பருகிய பொழுது ஒரு வினோதமான பய பக்தியும், பிரமிப்பும் என்னுள் எழுவதை உணர்ந்தேன்.

மெல்லிய குரலில் என் காதினுள் துறவி, "இந்த மலை இருக்கிறது பாருங்கள், இது யாவரும் போற்றும் புனிதப் பொருள் மட்டுமில்லை, இந்த பூலோகத்தின் அத்யாத்ம மையத்தைக் காட்டவே இந்த மலையைத் தேவர்கள் இங்கு எழுப்பியுள்ளார்கள் எனவும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் நம்பி வருகிறார்கள், புராணங்களும் கூறுகின்றன" என்றார்.

மகரிஷியின் ஆஸ்ரமத்தை வண்டி நெருங்கியது.  சாலையை விட்டுத் திரும்பி மண்பாதை வழியாக வண்டி சென்றது.  தென்னை மற்றும் மாமரங்கள் நிரந்து அடர்ந்த ஒரு தொப்பை அடைந்தோம்.  அதையும் கடந்து சென்றால் ஒரு வாயிலருகே பாதை முடிவடைந்தது.  வாயில் மூடப்பட்டு இருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை.  வண்டிக்காரர் கீழே குதித்து வாயிலைத் தள்ளித் திறந்தார்.  பின் வண்டியிலேறி எங்களை ஒரு பெரிய முற்றத்திற்கு ஓட்டிச் சென்றார்.  இசிவேடுத்துப் போயிருந்த கை, கால்களை நீட்டி, மடக்கி சரி செய்து கொண்டு, தரையில் இறங்கி நாற்புறமும் கண்களை ஓட விட்டேன்.

ஒதுக்கமாய் அமைந்திருந்த மகரிஷிகளின் அருள் ராஜ்ஜியத்தின் பௌதீக எல்லைகள் இவைதான், முன் பகுதியில் நெருக்கமாக வளரும் மரங்கள் மற்றும் மிக அடர்த்தியான பூந்தோட்டம், பின் பகுதியிலும் கிழக்குப் பக்கத்திலும் சப்பாத்திகள்ளி மற்றும் புதர்களான வேலிகள்; மேற்க்கே காடாக வளர்ந்த புதர்கள், மரங்கள் செறிந்த வானமும், மழையின் அடிவாரத்தில் மிக ரமணீயமான சுட்ட்ருப்புறக் காட்ச்சியின் நடுவில் ஆஸ்ரமம் அமைந்துள்ளது.  மிகவும் ஆழ்ந்த தான வாழ்வு வாழ விழைபவர்களுக்கு இந்த ஏகாந்தமாக ஒதுங்கியுள்ள ஆஸ்ரமம் தகுந்த இடமாக இருக்க கூடும்.

முற்றத்தின் இடது புறத்தில் கூரை வேய்ந்த இரு சிறு கட்டிடங்கள் இருந்தன.  அதையடுத்து ஒரு நீண்ட சதுர வடிவ நவீன கட்டிடம், சிவப்பு ஓடுகள் வேய்ந்த கூரை. கூரை சுவர்களுக்கு வெளிப்புறம் சற்றுக் கீழே இறங்கியுள்ளது.  கட்டிடத்துக்கு முன் தளமிடப்பட்ட ஒரு சிறிய தாழ்வாரம்.

முற்றத்தின் மையத்தில் ஒரு பெரிய கிணறு.  சட்டை அணியாத ஒரு கருப்பு நிறம் கொண்ட சிறுவன் அதிலிருந்து மெதுவாக ஒரு வாளியில் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தான்.  வெளியே நாங்கள் வந்த சப்தம் கேட்டு சிலர் கட்டிடங்களிருந்து முட்ட்ரத்துக்கு வந்தனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக உடை அணிந்திருந்தனர்.  ஒருவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.  நீங்கள் யார் என்று கேட்க்கும் தோரணையில் எல்லோரும் எங்களை உற்று பார்த்தனர்.  துறவிக்கு மிக உற்ச்சாகம், வாயெல்லாம் பல், அவர்களுடைய திகைப்பை இவர் மிகவும் ரசித்தார்.  அவர்களருகே சென்று தமிழில் என்னவோ சொன்னார்.  உடனே அவர்கள் முகங்களில் பெரிய மாறுதலேர்ப்பட்டது.முகங்கள் பிரகாசமாயின.  அனைவரும் மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள்.  எனக்கு அவர்களுடைய முக பாவங்களும் அவர்கள் நடந்து கொண்ட விதமும் மிகவும் பிடித்துப் போயின.

"போகலாம்! வாருங்கள்" என்றார் துறவி.

தாழ்வாரத்தின் வெளியே சற்று நின்றேன்.  பின் நான் காணிக்கையாகக் கொண்டு வந்திருந்த பழங்களைக் கையிலேந்திக் கொண்டு திறந்திருந்த கதவு வழியாக ஹாலுக்குள் நுழைந்தேன்.

சுமார் இருபது ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் திரும்பின.  அவற்றின் சொந்தக்காரர்கள் தரையின் மீது அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர்.  கடப்பாக் கற்கள் பதித்த கரும்பழுப்பு நிறத்துத் தரை.  அனைவரும் வலது பக்க ஓரத்திலிருந்து பவ்யமாகத் தள்ளியே உட்கார்ந்திருந்தனர்.  அவர்கள் அமர்ந்திருந்த டிக்கை நான் நோக்கினேன். 

அங்கே நீளமான வெள்ளை சோபாவில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

"இவர் தான் மகரிஷிகள், சந்தேகமே இல்லை" என்றது என் மனம்.

துறவியார் சோபாவை அணுகித் தரை மீது வீழ்ந்து வணங்கினார்.  கைகளை சேர்த்துத் தனது கண்களை அவற்றின் மேல் புதைத்தார்.

நாங்கள் ஹாலிற்குள் நுழைந்த திசையை, ஜன்னலின் வழியாக கண்ணிமைக்காது நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தார் மகரிஷி.  காலை வெளிச்சம் மகரிஷிகள் மீது தெளிவாக படிந்திருந்தமையால் நான் அவரது முகத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மனதில் நன்கு குறித்துக் கொள்ள முடிந்தது.  அவர் தன் சிரத்தச் சற்றேனும் அசைக்கவில்லை.  எனவே அவரது கண் பரவில் விழும் எண்ணத்துடன் சோபாவின் அருகே அமைதியாகச் சென்றேன்.  பழங்களை அவர் முன் வினயமாக வைத்துவிட்டு இரண்டடி பின் சென்று நின்றேன்.

No comments:

Post a Comment